‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்!!!

‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி.


கோலிவூடில் இப்பொழுதெல்லாம் புதிய முறையில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அதாவது முதலில் படத்தில் உள்ள ஒரு பாட்டை வெளியிட்டு புகழ் கொடி நாட்டப்படுகிறது. அதன்பின்னர் முழுப்பாடல்கள் வெளியீடும் இடம் பெறுகின்றன.

இந்த வரிசையில், கொல வெறி...." பாடல் வெளியிடப்பட்டு மிகப் பிரபலாமாகியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசைஅமைப்பில் இன்னுமொரு பாடல் வெளியிடப்படுகிறது.

நா.முத்துக்குமார் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கமர்சியல் பாடலுக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் ஒரு பாடல்..... பாடல் வரிகளை சிதைக்காத இசை கோர்வை மிக அருமை. பாடலின் இடை இடையே வரும் அந்த மிர்தங்கம் + கிளாசிக் டச் ..... அட அட.... மிக அருமை!!!

யுவன் ஷங்கர் ராஜா & சூப்பர் சிங்கர் 'ரேணு' இவர்களின் இனிமையான குரல்களில் பாடல் உருவான விதம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் என்பனவும் பாடலின் வீடியோ இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.



பாடலின் வரிகள் உங்களுக்காக....
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி...
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா...

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்


ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..


ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போ போ போடா..
வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



3 comments:

தருமி said...

//யவன் & சைந்தவி இனிமையான குரல்களில்//

சைந்தவி ...?
சூப்பர் சிங்கர் ரேணு அல்லவா அது?

Sankar said...

Kannan.. FYI.. Yuvan Shankar Raja is the first music director who introuduced the trend of releasing single track of the songs from the movie.. Yuvan is super tallented music director in Tamil Cinema.. Just making the songs as hit is not great thing.. The music director should rock in background score too.. Yuvan does that job very well..

Kolipaiyan said...

நண்பரே, உங்கள் தகவல் சரிதான். ரேணு பெயர் சரிசெய்யபட்டது.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top