முட்டாள் யார் ?

அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு தத்துவ ஞானி முல்லாவை சந்திக்க விரும்பி அவரை எப்போது சந்தக்க முடியும் என்று கேட்டு அனுப்பியிருந்தார்.

ஒரு குறிப்பிட நேரத்தில் வந்ததால் தம்மை சந்தக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறுமொழி அனுப்பியிருந்தார்.

அந்தக் குறிப்பிட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டு வந்தார். ஆனால் தவிக்க முடியாத ஓர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது.

தம்மை வரச்சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது அவர் வேண்டுமென்றே தம்மை இழிவுபடுத்தப் போட்ட திட்டம் என்று தவறாகக் கருதி கடும்கோபம் கொண்ட தத்துவ ஞானி ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து முல்லாவின் வீட்டுக் கதவில் 'முட்டாள் கழுதை' என்று எழுதிவிட்டு சென்றார்.

சற்று நேரம்கழித்து வீடு திரும்பிய முல்லா தன வீட்டுக் கதவில் எழுதப்பட்டிருந்த சொல்லைப் பார்த்து விட்டு அவர் மனைவியிடம் விசாரித்தார்.

நடத்த நிகழ்ச்சியை மனைவி அவரிடம் விளக்கி சொன்னார். உடனே முல்லா அநதத் தத்துவ ஞானியின் வீட்டுக்கு சென்றார்.

முல்லாவைக் கண்டதும் தத்துவ ஞானிக்கு அச்சமாக இருந்தது. அவரைப் பற்றி முட்டாள் கழுதை என்று அவர் வீட்டுக் கதவில் எழுதியது கண்டு கோபம் கொண்டு முல்லா தம்மிடம் சண்டை போட வந்திருக்கிறாரோ என்று எண்ணினார்.

ஆனால் முல்லவோ, ஞானியைப் பணிவுடன் வணக்கி, "அறினர் பெருமானே, என் வீட்டுக் கதவில் தங்கள் பெயரை தாங்கள் எழுதிவிட்டு வந்திருப்பதைக் கண்டு தாங்கள் வந்து சென்ற விசயத்தை அறிந்துகொண்டேன். மன்னிக்கவேண்டும். எதிபாராமல் அலுவல் காரணமாக தாங்கள் வந்து சமயம் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது" என்றார்.

தன்னையே முட்டாள் கழுதை ஆக்கிவிட்ட முல்லாவின் அறிவு சாதுரியத்தைக் கண்டு தத்துவ ஞானி வாயடைத்துப் போய்விட்டார்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top